உள்ளூர் செய்திகள்

திண்டிவனம் அருகே வாகனம் மோதி ஆட்டோ டிரைவர் பலி

Published On 2023-09-04 13:24 IST   |   Update On 2023-09-04 13:24:00 IST
  • சிவா அவரது வீட்டில் இருந்து அருகே உள்ள டீ கடைக்கு சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார்.
  • சிவா சம்பவ இடத்திலே உடல் நசுங்கி உயிரிழந்தார்.

விழுப்புரம்: 

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த வேம்முண்டி பகுதியைச் சேர்ந்தவர் ஆட்டோ டிரைவர் சிவா (வயது 52). இவர் அவரது வீட்டில் இருந்து அருகே உள்ள டீ கடைக்கு சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது திண்டிவனம்-திருவண்ணாமலை சாலை சிப்காட் அருகே எதிர்பாராத விதமாக அடையாளம் தெரியாத வாகனம் இவர் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சிவா சம்பவ இடத்திலே உடல் நசுங்கி உயிரிழந்தார். விபத்து குறித்து ரோசனை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News