உள்ளூர் செய்திகள்

செல்போன் கடையில் திருட முயற்சி

Published On 2022-12-14 10:05 GMT   |   Update On 2022-12-14 10:05 GMT
  • பரமத்திவேலூர் போலீஸ் நிலையம் எதிரே செல்போன் கடை இயங்கி வருகிறது. நேற்று முன்தினம் இரவு கடையின் உரிமையாளர் வழக்கம்போல் கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றுள்ளார். நேற்று காலை வந்து பார்த்தபோது, கடையின் பூட்டை உடைக்கப்பட்டு இருந்தது.
  • இதையடுத்தில் கடையில் இருந்த சி.சி.டி.வி கேமரா பதிவுகளை பார்த்தபோது, நேற்று நள்ளிரவு 1 மணி அளவில் மர்ம நபர் ஒருவர், கடையின் பூட்டை உடைக்க முயற்சித்தது தெரியவந்தது.

பரமத்தி வேலூர்:

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் போலீஸ் நிலையம் எதிரே செல்போன் கடை இயங்கி வருகிறது. நேற்று முன்தினம் இரவு கடையின் உரிமையாளர் பிலால் (வயது 35) வழக்கம்போல் கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றுள்ளார். நேற்று காலை வந்து பார்த்தபோது, கடையின் பூட்டை உடைக்கப்பட்டு இருந்தது.

இதையடுத்தில் கடையில் இருந்த சி.சி.டி.வி கேமரா பதிவுகளை பார்த்தபோது, நேற்று நள்ளிரவு 1 மணி அளவில் மர்ம நபர் ஒருவர், கடையின் பூட்டை உடைக்க முயற்சித்தது தெரியவந்தது. மேலும் கடையின் முன்புறம் அலமாரியில் வைத்திருந்த செல்போன் கவர்கள் திருடி பாக்கெட்டில் வைத்ததும் வீடியோவில் பதிவாகி இருந்தது.

இது குறித்து பரமத்தி வேலூர் போலீசில் கடையின் உரிமையாளர் பிலால் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தியதில், கடையில் திருட முயற்சி செய்தது வட மாநிலத்தைச் சேர்ந்தவர் என்பது தெரிய வந்துள்ளது. போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News