உள்ளூர் செய்திகள்

கொலை முயற்சி வழக்கு - குற்றவாளிகளுக்கு 3 ஆண்டுகள் சிறை

Published On 2022-06-23 09:36 GMT   |   Update On 2022-06-23 09:36 GMT
  • செம்போடை மகாராஜபுரம் கிராமத்தில் நடந்த கொலை முயற்சி வழக்கில் குற்றவாளிகளுக்கு 3 வருடம் சிறை தண்டனை விதித்தது.
  • இந்த வழக்கிற்கு தண்டனை பெற்று தர உதவியாக இருந்த கூடுதல் அரசு தரப்பு வழக்கறிஞர் கவுதமனை பலர் பாராட்டினர்.

நாகப்பட்டினம்:

வேதாரண்யம் அருகே செம்போடை மகாராஜபுரம் கிராமத்தில் கடந்த 2007-ம் ஆண்டு நடைபெற்ற ஒரு கொலை முயற்சி வழக்கில் ராமசாமி, பாலகுரு, முத்துகிருஷ்ணன், தியாகராஜன் ஆகியோருக்கு 3 வருடம் சிறை தண்டனையும், ரூ.10,000 அபராதமும் வழங்கி தலைமை குற்றவியல் நீதிபதி கார்த்திகா உத்தரவிட்டார். இதில் ராமசாமி வயது மூப்பின் காரணமாக ஏற்கனவே இறந்து விட்டார்.

மேலும் இந்த வழக்கிற்கு தண்டனை பெற்று தர உதவியாக இருந்த கூடுதல் அரசு தரப்பு வழக்கறிஞர் கவுதமனை பலர் பாராட்டினர்.

Tags:    

Similar News