உள்ளூர் செய்திகள்

காரைக்கால் நிரவியில் முன்விரோதம் காரணமாக பெண் மீது தாக்குதல்: தொழிலாளி கைது

Published On 2023-05-14 08:22 GMT   |   Update On 2023-05-14 08:22 GMT
  • விறகுகளை வைப்பதில் இருவருக்கும் முன்விரோதம் இருந்து வந்தது.
  • வாசுகியின் ஸ்கூட்டரை தீயில் தள்ளி விட்டு எரித்ததாக கூறப்படு கிறது.

புதுச்சேரி:

காரைக்காலை அடுத்த நிரவி நடுஓடுதுறை பிள்ளை யார் கோவில் தெருவில் வசிப்பவர் வாசுகி (வயது30). இவரது பக்கத்து வீட்டில் வசிப்பவர் ராஜசேகர் (50). இவர் ரியல் எஸ்டே தொழில் செய்து வருகிறார். இரு வர்கள் வீட்டின் அருகே உள்ள புறம்போக்கு நிலத்தில் மரபொருட்கள், விறகுகளை வைப்பதில் இருவருக்கும் முன்விரோதம் இருந்து வந்தது.

இந்நிலையில், சம்பவத் தன்று இருவரும் தங்கள் பொருட்கள் போட்டு வைத்திருந்த இடத்தில் குப்பைகளை எரித்ததாக கூறப்படுகிறது. இதில் இரு வருகும் இடையே வாக்கு வாதம் ஏற்பட்டது. அப்போது, ராஜசேகர், வாசுகியை மரக்கட்டையால் தாக்கி, வாசுகியின் ஸ்கூட்டரை தீயில் தள்ளி விட்டு எரித்ததாக கூறப்படு கிறது.

Tags:    

Similar News