உள்ளூர் செய்திகள்

தூத்துக்குடியில் பெயிண்டர் மீது தாக்குதல் - 2 ரவுடிகள் கைது

Published On 2023-06-11 14:08 IST   |   Update On 2023-06-11 14:08:00 IST
  • உதயமூர்த்தி, சக்திவேல் ஆகிய இருவரும் அடிக்கடி குடித்துவிட்டு மது பாட்டில்களை கண்ணன் வீட்டில் வீசி வந்துள்ளனர்.
  • சப்-இன்ஸ்பெக்டர் முகில் அரசன், சிவக்குமார் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி உதயமூர்த்தி, சக்திவேல் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.

தூத்துக்குடி:

தூத்துக்குடி சத்யா நகரை சேர்ந்தவர் கண்ணன் (வயது 56) பெயிண்டராக வேலை பார்த்து வருகிறார். இவரது பக்கத்து வீட்டை சேர்ந்தவர்கள் உதயமூர்த்தி (23) ,சக்திவேல் (20). இவர்கள் இருவரும் அடிக்கடி குடித்துவிட்டு மது பாட்டில்களை கண்ணன் வீட்டில் வீசி வந்துள்ளனர். இதுகுறித்து பலமுறை கண்ணன் கூறியும் அவர்கள் கண்டு கொள்ளவில்லை.

இந்நிலையில் நேற்று இரவும் குடித்து விட்டு மது பாட்டில்களை கண்ணன் வீட்டில் வீசி உள்ளனர். இதனால் வாக்குவாதம் ஏற்பட்டு தகராறு ஏற்பட்டுள்ளது.

இதில் ஆத்திரம் அடைந்த உதயமூர்த்தி மற்றும் கண்ணன் ஆகிய 2 பேரும் கம்பு, கட்டைகளால் கண்ணனை தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தனர்.காயம் அடைந்த கண்ணன் தூத்துக்குடி அரசு மருத்து வமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து இன்ஸ்பெக்டர் ராஜாராம், சப்-இன்ஸ்பெக்டர் முகில் அரசன், சிவக்குமார் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி உதயமூர்த்தி, சக்திவேல் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.

உதயமூர்த்தி மீது சிப்காட் போலீஸ் நிலையத்தில் கொலை வழக்கு, தென்பாகம் போலீஸ் நிலையத்தில் கொலை முயற்சி வழக்கு உட்பட 8 வழக்குகள் இருப்பதாகவும், சக்திவேல் மீது அடிதடி, வழிப்பறி உள்ளிட்ட பல்வேறு வழக்கு கள் பதிவு செய்யப்பட்டு உள்ளது. இவர்கள் 2 பேர் பெயர் ரவுடி பட்டியலில் உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

Tags:    

Similar News