உள்ளூர் செய்திகள்

மூலைக்கரைப்பட்டி அருகே விவசாயி மீது தாக்குதல்

Published On 2022-11-14 09:01 GMT   |   Update On 2022-11-14 09:01 GMT
  • மூலைக்கரைப்பட்டி அருகே உள்ள கடம்பன் குளம் வடக்கு தெருவை சேர்ந்தவர் விவசாயி மணக்கண்.
  • அஜித்குமார், அவரது உறவினர்கள் அந்தோணி, நூர்து உள்பட 7 பேர் சேர்ந்து மணக்கன்னை வழிமறித்து தகராறில் ஈடுபட்டனர்

களக்காடு:

மூலைக்கரைப்பட்டி அருகே உள்ள கடம்பன் குளம் வடக்கு தெருவை சேர்ந்தவர் மணக்கண் (வயது 53). விவசாயி. இவருக்கும் அவரது சகோதரர் மகாராஜனுக்கும் பூர்வீக வீட்டை பங்கு வைப்பதில் தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வருகிறது.

இந்நிலையில் சம்பவத்தன்று மணக்கண் தனது மனைவி கலை செல்வியுடன் மகாராஜன் வீட்டு வழியாக சென்று கொண்டிருந்தார். அப்போது மகாராஜன், அவரது மகன் அஜித்குமார், அவரது உறவினர்கள் அந்தோணி, நூர்து உள்பட 7 பேர் சேர்ந்து மணக்கன்னை வழிமறித்து தகராறில் ஈடுபட்டனர். இதில் ஆத்திரம் அடைந்த மகாராஜன் உள்பட 7 பேரும் சேர்ந்து மணக்கண்ணை கம்பால் தாக்கினர்.

மேலும் கொலை மிரட்டலும் விடுத்தனர். இதுபற்றி அவர் மூலைக் கரைப்பட்டி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி மகாராஜன் உள்பட 7 பேரையும் தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News