உள்ளூர் செய்திகள்

கோவையில் கல்லூரி மாணவி மீது தாக்குதல்

Published On 2022-10-20 10:01 GMT   |   Update On 2022-10-20 10:01 GMT
  • கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வருகிறார்.
  • புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவை

கோவை சுகுனாபுரம் பகுதியை சேர்ந்தவர் தேவபிரசாத். இவரது மகள் அபிநயஸ்ரீ (வயது 20). இவர் கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வருகிறார்.

சம்பவத்தன்று இவர் வழக்கம் போல கல்லூரிக்கு சென்றார். மாலை கல்லூரி முடிந்து வீட்டுக்கு செல்வதற்காக சுகுனாபுரம் பஸ் நிறுத்தத்தில் இருந்து நடந்து சென்றார்.

அப்போது அங்கு வாலிபர் ஒருவர் வந்தார். அவர் திடீரென அபிநயஸ்ரீ அருகில் வந்து பேசினார். ஆனால் அவர் அதை கண்டு கொள்ளாமல் நடந்து சென்றார். பின்னர் அந்த வாலிபர் அவரின் செல்போன் எண்ணை கேட்டார்.

அதற்கு அவர் அந்த வாலிபரை கண்டித்தார். இதனால் ஆத்திரம் அடைந்த அந்த வாலிபர் அவரை தகாத வார்த்தைகளால் திட்டி அவரை கீழே தள்ளி விட்டு மிரட்டி சென்றார். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் வீட்டுக்கு சென்று தனது பெற்றோரிடம் நடந்தவற்றை கூறினார்.

பின்னர் அவர்கள் அபிநயஸ்ரீ அழைத்து போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்க சென்றனர். அங்கு அபிநயஸ்ரீ புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

Similar News