உள்ளூர் செய்திகள்

திருவெண்ணைநல்லூரில்:பயணியர் நிழற்குடையில் இருந்த சேர்களை திருடிய வாலிபர் கைது

Published On 2023-11-06 09:45 GMT   |   Update On 2023-11-06 09:45 GMT
நிழற்குடையில் இருந்த சேர்களை சம்பவத் தன்று இரவு எந்திரத்தின் உதவியுடன் வெட்டி எடுத்து சென்றுவிட்டனர்.

விழுப்புரம்:

திருவெணைநல்லூர் அரசு கலைக்கல்லூரி அருகே பஸ் நிறுத்தம் உள்ளது. இங்கு பயணியர் நிழற்குடை அமைக்கப் பட்டுள்ளது. இதில் பஸ்சிற் காக காத்திருக்கும் பயணி கள் அமர்வதற்காக இரும்பி லான சேர்கள் போடப்பட்டி ருந்தது.இந்த நிழற்குடையில் இருந்த சேர்களை சம்பவத் தன்று இரவு எந்திரத்தின் உதவியுடன் வெட்டி எடுத்து சென்றுவிட்டனர். இது குறித்த தகவலின் பேரில் கிராம நிர்வாக அலுவலர் கலியமூர்த்தி, திருவெண்ணைநல்லூர் போலீசாரிடம் புகார் கொடுத்தார்.

புகாரின் பேரில் போலீ சார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதில் மணக்குப் பத்தை சேர்ந்த ரமேஷ் (வயது 22) என்பவர் பயணியர் நிழற்குடையில் இருந்த இரும்பு சேர்களை திருடிச் சென்றது தெரிய வந்தது. இதையடுத்து மணக்குப் பத்திற்கு விரைந்து சென்ற போலீசார் ரமேஷை கைது செய்தனர்.

Tags:    

Similar News