உள்ளூர் செய்திகள்

தபால் அலுவலகத்தில் ஆதார் சிறப்பு முகாம்

Published On 2022-12-22 04:24 GMT   |   Update On 2022-12-22 04:24 GMT
  • ஊத்துக்குளியில் உள்ள தபால் அலுவலகத்தில் ஆதார் சிறப்பு முகாம் நடந்து வருகிறது.
  • ஈரோடு கோட்ட அஞ்சல் கண்காணிப்பாளர் கருணாகர பாபு தெரிவித்துள்ளார்.

பெருமாநல்லூர் : 

திருப்பூர் மாவட்டம், ஊத்துக்குளியில் உள்ள தபால் அலுவலகத்தில் ஆதார் சிறப்பு முகாம் நடந்து வருகிறது. தொடர்ந்து இம்முகாம் வருகிற 27-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) வரை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி நடைபெறும்.இதில் ஆதாருடன் மொபைல் எண் இணைப்பு, கைரேகை பதிவு, முகவரி, பெயர் மாற்றம் மற்றும் பிறந்த தேதி பதிவு போன்ற முக்கிய திருத்தங்கள் பதிவு செய்யப்படுகிறது. பொதுமக்கள் இந்த முகாமை பயன்படுத்தி கொள்ளலாம்.

இந்த தகவலை ஈரோடு கோட்ட அஞ்சல் கண்காணிப்பாளர் கருணாகர பாபு தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News