உள்ளூர் செய்திகள்

காவடி எடுத்து ஊர்வலமாக வந்த பக்தர்கள்.

சீர்காழியில், காவடி எடுத்து ஊர்வலமாக வந்து பக்தர்கள் வழிபாடு

Published On 2023-02-14 07:15 GMT   |   Update On 2023-02-14 07:15 GMT
  • அபிஷேகம் நடைபெற்று மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
  • பெண்கள் மாவிளக்கு போடுதல், பேச்சி ரூபம் வேஷத்துடன் மயான சூரை நிகழ்வு நடைபெற உள்ளது.

சீர்காழி:

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தென்பாதியில் அமைந்துள்ள ராஜராஜேஸ்வரி என்கின்ற அங்காள பரமேஸ்வரி அம்மன் ஆலயம் அமைந்துள்ளது.

மிகவும் பழமை வாய்ந்த இக்கோவிலில் மகா சிவராத்திரி விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இதனை முன்னிட்டு காலையில் கொடி ஊர்வலமும், பக்தர்கள் அழகு காவடிகள் எடுத்து கொண்டும் ஊர்வலமாக வலம் வந்து கோயிலை அடைந்தனர். அதனைத் தொடர்ந்து அபிஷேகம் ஆராதனைகள் நடைபெற்று மகாதீபாராதனை காட்டப்பட்டது.

விழாவின் முக்கிய நிகழ்வான மயான சூரை நிகழ்வு மகா சிவராத்திரியை முன்னிட்டு 18-ந்தேதி இரவு நடைபெற உள்ளது.

அன்று திருத்தேர்பவனி, அலகு காவடிகள் ஊர்வலமும் மாலை பெண்கள் மாவிளக்கு போடுதல், பேச்சி ரூபம் எனும் ஆகம வேஷத்துடன் மயான சூரை நிகழ்வு நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News