உள்ளூர் செய்திகள்
நல்லாக் கவுண்டம்பாளையத்தில் ரேசன் கடை கட்டும் பணி தீவிரம்
- ரேசன் கடை கட்டும் கட்டிட பணி ெதாடங்கி நடைபெற்று வருகிறது.
- ஒன்றிய தலைவர் ஜே.பி.ரவிச்சந்திரன் ரேசன் கடை கட்டும் கட்டிட பணியை பார்வையிட்டு பணிகளை விரைந்து முடிக்க ஒப்பந்ததாரரிடம் அறிவுறுத்தினார்.
பரமத்தி வேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா கபிலர்மலை ஊராட்சி ஒன்றியம் ஜமீன் இளம்பள்ளி ஊராட்சி நல்லா கவுண்டம்பாளையத்தில் ரேசன் கடை கட்டும் கட்டிட பணி ெதாடங்கி நடைபெற்று வருகிறது. அதுபோல் கபிலர்மலை ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் பல்வேறு பணிகளும் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் கபிலர்மலை ஒன்றிய தலைவர் ஜே.பி.ரவிச்சந்தி ரன், நடைபெற்று வரும் பல்வேறு பணிகளை பார்வையிட்டு வருகிறார் . அதேபோல் ஜமீன் இளம் பள்ளி ஊராட்சி நல்லா கவுண்டம்பாளையம் பகுதியில் நடைபெற்று வரும் ரேசன் கடை கட்டும் கட்டிட பணியை பார்வையிட்டு பணிகளை விரைந்து முடிக்க ஒப்பந்ததாரரிடம் அறிவுறுத்தினார். அப்போது ஊராட்சித் தலைவர் மற்றும் உறுப்பினர்கள், கட்சி பொறுப்பாளர்கள் உடனிருந்தனர்.