உள்ளூர் செய்திகள்

ஓசூர் தனியார் சிட்பண்ட்ஸ் நிறுவனத்தில்ரூ.27.80 லட்சம் பணம் மோசடி

Published On 2023-02-08 15:37 IST   |   Update On 2023-02-08 15:37:00 IST
  • ரூ.27 லட்சத்து 80 ஆயிரத்து 560 பணத்தை நிறுவனத்தில் கட்டாமல் இருந்துள்ளார்.
  • புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கிருஷ்ணகிரி, 

நாமக்கல் மாவட்டம், நல்லப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் தேவராஜ். இவர் ஓசூர் தனியார் சிட்பண்ட் நிறுவனத்தில் மேலாளராக வேலை பார்த்து வந்தார்.

இந்த நிலையில் இவர் பொதுமக்களிடம் இருந்து வசூலித்த ரூ.27 லட்சத்து 80 ஆயிரத்து 560 பணத்தை நிறுவனத்தில் கட்டாமல் இருந்துள்ளார்.

இது குறித்து ஓசூர் போலீசில் அந்த நிறுவனத்தில் அதிகாரி கண்ணன் புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News