உள்ளூர் செய்திகள்
ஓசூர் கிளை நூலகத்தில் உலக புத்தக தின விழா கொண்டாட்டம்
- ஓசூரில் உள்ள முழுநேர கிளை நூலகத்தில், உலக புத்தக தின விழா கொண்டாடப்பட்டது.
- வாசகர்கள், புரவலர்கள், போட்டித் தேர்வு மாணவர்கள், வாசகர் வட்ட உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
ஓசூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் உள்ள முழுநேர கிளை நூலகத்தில், உலக புத்தக தின விழா கொண்டாடப்பட்டது.
தனியார் அறக்கட்டளை மற்றும் வாசகர் வட்டம் இணைந்து நடத்திய இந்நிகழ்ச்சிக்கு வாசகர் வட்ட பொருளாளர் ஜெகந்நாதன் தலைமை தாங்கினார். ஓசூர் அரசு கல்லூரி பேராசிரியர் பொன்ஜெயந்தி மற்றும் அந்திவாடி அரசு உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் ராணி ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு விழாவில் பேசினர் .விழாவின்போது, நூலக புரவலர்களுக்கு, புரவலர் பட்டயம் வழங்கப்பட்டது.
இதில், வாசகர்கள், புரவலர்கள், போட்டித் தேர்வு மாணவர்கள், வாசகர் வட்ட உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். முடிவில் நூலகர் ரேணுகா சக்திவேல் நன்றி கூறினார்.