உள்ளூர் செய்திகள்

பென்னாகரம் தனியார் பயிற்சி மைய அகாடமில் பாராட்டு விழா

Published On 2023-05-31 10:14 GMT   |   Update On 2023-05-31 10:14 GMT
  • இந்த நிகழ்ச்சிக்கு தேஜஸ் பயிற்சி மைய நிர்வாக இயக்குனர் கண்ணையன் தலைமை தாங்கினார்.
  • பயிற்சி பெற்று, தேர்வில் வெற்றி பெற்று அரசு பணி செல்வோருக்கு கேடயம் வழங்கி பாராட்டு தெரிவித்தார்.

தொப்பூர்,

தருமபுரி மாவட்டம், பென்னாகரத்தில் தேஜஸ் போலீஸ் மற்றும் டிஎன்பிஎஸ்சி தனியார் பயிற்சி மைய அகாடமி அமைந்துள்ளது.

இந்த அகாடமி மையத்தின் மூலம் இரண்டாம் நிலை காவலர் மற்றும் டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்விற்கு பயிற்சி பெற்று, தேர்வு எழுதி வெற்றி பெற்று, அரசு பணி செல்வோருக்கு, கேடயம் வழங்கி பாராட்டு தெரிவிக்கும் நிகழ்ச்சி, நேற்று நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிக்கு தேஜஸ் பயிற்சி மைய நிர்வாக இயக்குனர் கண்ணையன் தலைமை தாங்கினார். முதுநிலை ஆசிரியர் முனிராஜ், கந்தசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பயிற்சி மைய மாணவி ஜெயப்பிரியா விழாவில் பங்கேற்ற அனைவரையும் வரவேற்று பேசினார்.

இதில் சிறப்பு அழைப்பாளராக பென்னாகரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்தமிழ்செல்வன் கலந்து கொண்டு, பயிற்சி மையத்தின் மூலம் பயிற்சி பெற்று, தேர்வில் வெற்றி பெற்று அரசு பணி செல்வோருக்கு கேடயம் வழங்கி பாராட்டு தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில் பயிற்சி மைய ஆசிரியர் மற்றும் பயிற்சி மைய மாணவ, மாணவர்கள் மற்றும் பயிற்சி மைய நிர்வாகத்தினர், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News