உள்ளூர் செய்திகள்

 குளத்தில் மீன்கள் செத்து மிதப்பதை படத்தில் காணலாம்.

குளங்களில் தண்ணீர் குறைந்து வருவதால் மீன்கள் செத்து மிதக்கிறது

Published On 2023-04-17 13:00 IST   |   Update On 2023-04-17 13:00:00 IST
  • பிள்ளைகளத்தூர் ஊராட்சிக்கு உட்பட்ட மேட்டுப்பாளையத்தில் சுமார் 10-ஏக்கர் பரப்பளவில் குளம் உள்ளது.
  • குளத்தில் தேங்கி உள்ள நீரின் அளவு குறைந்து வருவதால் மற்றும் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமானதால் குளத்தில் உள்ள நீர் சூடாகி குளத்தில் இருந்த பெரும்பாலான மீன்கள் செத்து மிதக்கிறது.

பரமத்திவேலூர்:

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா, பரமத்தி அருகே உள்ள பிள்ளைகளத்தூர் ஊராட்சிக்கு உட்பட்ட மேட்டுப்பாளையத்தில் சுமார் 10-ஏக்கர் பரப்பளவில் குளம் உள்ளது.

கடந்த ஆண்டு பெய்த மழை காரணமாக பரமத்தி பகுதியில் உள்ள பெரும்பாலான குளங்கள் நிரம்பியது. அதே போல் மேட்டுப்பாளையத்தில் உள்ள குளமும் நிரம்பியது. இதில் ஏராளமான மீன்கள் உற்பத்தியாகி இருந்தது. இந்த நிலையில் குளத்தில் தேங்கி உள்ள நீரின் அளவு குறைந்து வருவதால் மற்றும் கடந்த சில நாட்க ளாக வெயிலின் தாக்கம் அதிகமானதால் குளத்தில் உள்ள நீர் சூடாகி குளத்தில் இருந்த பெரும்பாலான மீன்கள் செத்து மிதக்கிறது.

இதன் காரணமாக அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன் நோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. எனவே குளத்தில் செத்து மிதக்கும் மீன்களை அப்புறப்ப டுத்தவும், உயிருடன் இருக்கும் மீன்களை பாது காக்கவும் துறைசார்ந்த அதிகாரிகள் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News