உள்ளூர் செய்திகள்

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்ற இந்து முன்னணியினர் கைது

Published On 2023-09-29 15:13 IST   |   Update On 2023-09-29 15:13:00 IST
  • ஜெயங்கொண்டம் அருகேஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்ற இந்து முன்னணியினர்
  • 18 பேரைய கைது செய்தனர்.

ஜெயங்கொண்டம்,  

அரியலூர் மாவட்ட இந்து முன்னணி மாவட்ட பொருளாளர் சபரிராஜனை எவ்வித காரணமும் இன்றி போலீசார் கைது செய்ததுடன், பொய்யான வழக்குகளை பதிவு செய்து அதில் இந்து முன்னணி திருச்சி கோட்ட பொறுப்பாளர் ராஜசேகர் உள்ளிட்ட இந்து முன்னணி நிர்வாகிகளை கைது செய்ய போலீசார் தீவிரம் காட்டி வருவதை கண்டித்தும், உதயநிதி ஸ்டாலினை கண்டித்தும் ஜெயங்கொண்டம் நான்கு ரோடு அருகே இந்து முன்னணி மாவட்ட துணைத்தலைவர் பழனிச்சாமி தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்றனர்.

அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்ற திருச்சி கோட்ட பொறுப்பாளர் குணா, மாநில செயற்குழு உறுப்பினர் பாலமுருகன், மாவட்டத் துணைத் தலைவர் ரமேஷ், மாவட்ட பொதுச் செயலாளர் ஐயம்பெருமாள், மாவட்ட செயலாளர் திருமூர்த்தி உள்ளிட்ட இந்து முன்னணியை சேர்ந்த 18 பேரைய கைது செய்தனர்.

Tags:    

Similar News