பெட்ரோல் விற்பனை நிலையத்தில் தகராறு ஊழியரை தாக்கிய 9 பேர் கைது
அரியலூர்.
அரியலூர் மாவட்டம் நெல்லி தோப்பு கிராமத்தில் பெட்ரோல் விற்பனை நிலை யம் இயங்கி வருகிறது. இங்கு கோடாலி கருப்பூர் வடக்கு தெருவை சேர்ந்த குணசே கரன் (வயது 42) என்பவர் பணியாற்றி வருகிறார்.
குண்டவெளி காலனி தெருவை சேர்ந்த பிரதீப் (20), பிரசாத் (20) ஆகியோர் தங்க ளது இருசக்கர வாகனத்திற்கு பெட்ரோல் போட்டுள்ளனர். அதற்கு குணசேகரன் பணம் கேட்டதற்கு பிரதீப் கூகுள் பேயில் பணம் அனுப்பியதாக கூறியுள்ளார்.
ஆனால் குணசேகரன் பணம் வரவில்லை என்று தெரிவித்துள்ளார். இதனால் அவர்களுக்கு இடையே தக ராறு ஏற்பட்டுள்ளது.
அப்போது சொக்கலிங்க புரம் மெயின் ரோடு தெருவை சேர்ந்த கலையரசன் (40), திலகர் (45) ஆகியோர் என்ன பிரச்சினை என்று கேட்டுள்ள னர். அதற்கு பிரதீப், பிரசாத் ஆகியோர் தகாத வார்த்தை களால் திட்டியுள்ளனர்.
பின்னர் அவர்கள் 2 பேரும் தங்களது உறவினர்க ளுக்கு போன் செய்து ஜெயசீ லன் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்டோரை வரவழைத்து குணசேகரன், திலகரை தாக்கி யுள்ளனர்.
இதுகுறித்து குணசேகரன், கலையரசன், திலகர் ஆகி யோர் கொடுத்த புகாரின் பேரில் மீன்சுருட்டி போலீசார் க பிரதீப், பிரசாத், விஜேந்தி ரன் (20), ராஜ்குமார் (20) உள்பட 9 பேரை கைது செய்த னர்.
இருதரப்பினர் இடையே மோதல்
அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் அருகே உள்ள இடையத்தன்குடி பகுதியை சேர்ந்தவர் பால்ராஜ் (வயது 38), வெளிப்பிரிங்கியம் பகுதியை சேர்ந்தவர் சூர்யா (24). சம்பவத்தன்று பெரிய திருக்கோணம் மெயின் ரோட்டில் பால்ராஜுக்கு சொந்தமான டிப்பர் லாரியை மகேந்திரன் என்பவர் ஓட்டி வந்துள்ளார்.
அப்போது அங்கு வந்த சூர்யா டிப்பர் லாரியை தடு த்து நிறுத்தி காலை நேரத்தில் மெயின் ரோட்டில் டிப்பர் லாரி செல்லக்கூடாது என்று தெரிவித்துள்ளார்.
இதனால் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டு ள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்த பால்ராஜ், அவரது நண்பர் ராவணேஸ்வரன் மற்றும் சூர்யாவின் தந்தை காமராஜ் ஆகியோர் அங்கு வந்துள்ளனர்.
பின்னர் அவர்கள் ஒரு வரை ஒருவர் தாக்கி கொண்ட னர். பின்னர் இந்த சம்பவம் தொடர்பாக இருதரப்பினர் அளித்த புகாரின் பேரில் சப்- இன்ஸ்பெக்டர் ரவிச்ச ந்திரன் மோதலில் ஈடுபட்ட பால்ராஜ், ராவணேஸ்வரன், சூர்யா, காமராஜ் ஆகிய 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.