உள்ளூர் செய்திகள்
40 இரு சக்கர வாகனங்கள் பறிமுதல்
அரியலூரில் சிறுவர், சிறுமியர் ஓட்டி வந்த 40 இரு சக்கர வாகனங்கள் பறிமுதல்
அரியலூர்,
அரியலூர் போக்குவரத்து இன்ஸ்பெக்டர் கார்த்திக்கேயன் தலைமையிலான போலீசார், தீவிர வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர்.
அப்போது, 18 வயதுக்குட்பட்ட மாணவர்கள், சிறுவர்கள், சிறுமிகள் ஓட்டி வந்த இரு சக்கர வாகனங்களை போலீசார், பறிமுதல் செய்தனர். இவ்வாறு பறிமுதல் செய்யப்பட்ட 40 இருசக்கர வாகனங்கள், காவல் நிலையத்துக்குச் எடுத்து செல்லப்பட்டது.
அங்கு சிறுவர்களுக்கும், அவர்களின் பெற்றோர்களுக்கும் அறிவுரை வழங்கிய போலீசார், இனிமேல் இது போன்ற செயலில் ஈடுபடக் காரணமாக இருக்க மாட்டோம் என உறுதிமொழி எழுதி வாங்கிக்கொண்டு, பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை ஒப்படைத்தனர்.