உள்ளூர் செய்திகள்

முன்விரோத தகராறில் வாலிபர் கைது

Published On 2022-11-02 14:48 IST   |   Update On 2022-11-02 14:48:00 IST
  • முன்விரோத தகராறில் வாலிபர் கைது செய்யப்பட்டார்
  • திட்டி தாக்கியதாக கூறப்படுகிறது.

அரியலூர்

அரியலூர் மாவட்டம், மீன்சுருட்டி அருகே உள்ள குண்டவெளி காலனி தெருவை சேர்ந்தவர் சஞ்சாய்காந்தி மகன் பிரவின்குமார்(வயது 23), இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த மோகன் மகன் பிரதீப்க்கும்(வயது 27) முன்விரோதம் இருந்து வந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு பிரதீப் மற்றும் இவரது தாய் செந்தாமரை ஆகிய இருவரும் சேர்ந்து பிரவின்குமார் வீட்டிற்கு சென்று அவரை திட்டி தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்த பிரவின்குமார் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து பிரவின்குமாரின் தாய் செல்வி கொடுத்த புகாரின் பேரில் மீன்சுருட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரதீபை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News