உள்ளூர் செய்திகள்

பாட்டு பாடி விவசாய நடவுப்பணியில் பெண்கள்

Published On 2022-11-07 09:15 GMT   |   Update On 2022-11-07 09:15 GMT
  • பாட்டு பாடி விவசாய நடவுப்பணியில் பெண்கள் ஈடுபட்டனர்.
  • சம்பா நடவுப்பணி தீவிரமடைந்துள்ளது.

அரியலூர்:

அரியலூர் மாவட்டம் திருமானூர் டெல்டா பகுதிகளில் சம்பா நடவுப்பணி தீவிரமடைந்துள்ளது. பாரம்பரிய நெல் ரகங்களில் தூய மல்லி, மாப்பிள்ளை சம்பா, கருப்பு கவனி, ஆத்தூர் கிச்சலி சம்பா உள்ளிட்ட பல்வேறு நெல் ரகங்களை இந்தாண்டு தமிழக அரசு அறிமுகப்படுத்தி உள்ளது. மேலும் குட்டை ரகங்களில் ஐ.ஆர். 20, 1009, கோ 43 வெள்ளைப் பொன்னி போன்ற ரகங்களும் பரவலாக நடவு செய்யப்பட்டு வருகின்றன.

இந்தநிலையில் கொட்டும் மழையிலும் விவசாய கூலித்தொழிலாளர்கள் நடவுப் பணிகளில் ஈடுபடும் போது வயல்வெளியில் நல்ல விளைச்சல் தர வேண்டும் என நாட்டுப்புற பாடல்களை பாடுவது வழக்கம். அண்மை காலமாக அருகி வந்த நிலையில் பாடல்களை பாடி நடவுப் பணிகளில் ஈடுபடுவது வருங்கால தலைமுறைக்கு வியப்பான ஒன்றாக உள்ளது. விஞ்ஞானிகள் ஆராய்ச்சியில் செடி கொடிகளுக்கு இசையை உணரும் தன்மையும், நல்ல காய், கனிகளை தருகிறதை உறுதி செய்துள்ள நிலையில் கிராமப்புறத்தில் தொன்று தொட்டு நடவுப்பணியில் பாடல் பாடி வருவது நம் முன்னோர்கள் தங்களது விவசாய தொழிலை நேசித்தது தெளிவாக விளங்குகிறது என நடவுப்பணியில் ஈடுபட்ட பெண்கள் கூறினர்.

Tags:    

Similar News