உள்ளூர் செய்திகள்
மக்கள் குறைதீர் கூட்டத்தில் நலத்திட்ட உதவிகள்
316 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டுள்ளன
அரியலூர்,
அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற மக்கள் குறைகேட்புக் கூட்டத்தில் 61 மாற்றுத் திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.கூட்டத்துக்கு கலெக்டர் பெ.ரமணசரஸ்வதி தலைமை வகித்து பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட 316 கோரிக்கை மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். பின்னர் அவர், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில், 61 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.5,93,784 மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் கலைவாணி, ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட இயக்குநர் ஈஸ்வரன், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதாரத் திட்ட அலுலவர் முருகண்ணன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் தட்சணாமூர்த்திமற்றும் மற்றும் அனைத்துத் துறை அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.