உள்ளூர் செய்திகள்

பெரியபாளையம் கிராமத்தில் கிராம சபை கூட்டம்

Published On 2022-12-15 09:27 GMT   |   Update On 2022-12-15 09:27 GMT
  • பெரியபாளையம் கிராமத்தில் கிராம சபை கூட்டம் நடந்தது
  • மக்களுடன் ஆலோசனை கலந்தாலோசிக்கப்பட்டது

அரியலூர்

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள பெரிய வளையம் கிராமத்தில் தேசிய ஊரக வளர்ச்சி திட்ட பணிகள் தேர்வு செய்வது குறித்த கிராம சபை கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் வேம்பு சுப்பிரமணியன் தலைமை வகித்தார். வரும் 2023 -2024 ஆம் ஆண்டிற்கு தேசிய ஊரக வளர்ச்சித் திட்டத்திற்கான பணிகள் தேர்வு செய்வது குறித்து கிராம மக்களுடன் ஆலோசனை கலந்து அலசிக்கப்பட்டது. தீர்மானத்தை ஊராட்சி செயலாளர் சோழன் வாசித்தார். கூட்டத்தில் உறுப்பினர்கள் மணிகண்டன், ராஜதுரை, கனிமொழி, சுசீலா, அன்புச்செல்வி உட்பட பொதுமக்கள் ஏராளமான கலந்து கொண்டனர். கூட்டத்தின் இறுதியில் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் கமலக்கண்ணன் நன்றி கூறினார்.

Tags:    

Similar News