கனரக லாரிகள் செல்ல நேரக்கட்டுப்பாடு தகவல் பலகை
- கனரக லாரிகள் செல்ல நேரக்கட்டுப்பாடு தகவல் பலகை
- முக்கிய சாலைகளில் 8 இடங்களில் எச்சரிக்கை பலகை வைக்கப்பட்டுள்ளது
ஜெயங்கொண்டம்,
ஜெயங்கொண்டம் போக்குவரத்து காவல்துறை சார்பில் பள்ளி நேரங்களில் கனரக வாகனங்கள் வராமல் தடுக்கும் விதமாக ஜெயங்கொண்டம் முக்கிய சாலைகளில் 8 இடங்களில் எச்சரிக்கை பலகை வைக்கப்பட்டுள்ளதுஅரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் கடைவீதிகளில் வர்த்தகர்கள் பொதுமக்கள் கோரிக்கையின் படி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெரோஸ் கான் அப்துல்லா உத்தரவின் பெயரில் டிஎஸ்பி ரவிச்சந்திரன் ஆலோசனைப்படி போக்குவரத்து காவல்துறை சார்பில் ஆய்வாளர் சாஹிரா பானு மற்றும் போக்குவரத்து போலீசார்கள் பள்ளி மற்றும் கல்லூரி நேரங்களில் விபத்து தடுக்கும் விதமாக காலை மற்றும் மாலை நேரங்களில் கனரக வாகனங்களை இயக்காமல் இருக்கும் வகையில் ஓட்டுனர்களுக்கு எச்சரிக்கும் விதமாக ஜெயங்கொண்டம் முக்கிய சந்திப்பில் 8 இடங்களில் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த விதிமுறைகளை மீறும் கனரக வாகனங்களுக்கு அபராதம் மிதித்து வாகனத்தை பறிமுதல் செய்யப்படும் என போக்குவரத்து காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.