ஜெயங்கொண்டம் அருகே ஹார்டுவேர்ஸ் கடையில் திருட்டு
- ஜெயங்கொண்டம் அருகே ஹார்டுவேர்ஸ் கடையில் திருட்டு போனது
- இது குறித்து ஜெயங்கொண்டம் காவல் நிலையத்தில் அடைக்கலசாமி புகார் செய்தார்.
ஜெயங்கொண்டம்,
அரியலூர் மாவட்டம் சூசையப்பர்பட்டினம் கிராமத்தைச் சேர்ந்தவர் அடைக்கலசாமி. இவர் சூரியமணல் கிராமம் மெயின் ரோட்டில் ஹார்டுவேர்ஸ் கடை நடத்தி வருகிறார். வழக்கம் போல கடையை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்றவர் மீண்டும் கடையை திறக்க வந்துள்ளார். அப்போது கடையின் முகப்பில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமரா உடைக்கப்பட்டிருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதனை அடுத்து உள்ளே சென்று பார்த்தபோது கல்லாவில் வைத்திருந்த 1800 ரூபாய் ரொக்கம் பணம், ஒரு மோட்டார், பத்து காயில் ஒயர் உள்ளிட்ட 50 ஆயிரம் மதிப்பிலான பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இது குறித்து ஜெயங்கொண்டம் காவல் நிலையத்தில் அடைக்கலசாமி புகார் செய்தார்.புகாரின் பேரில் ஜெயங்கொண்டம் டிஎஸ்பி ராஜா சோமசுந்தரம் தலைமையிலான போலீசார் வழக்கு பதிவு செய்து சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை செய்தனர். அப்போது கடையின் பின்னால் இருந்த சிறிய துவாரத்தின் (ஓட்டை) வழியாக திருடர்கள் உள்ளே நுழைந்து இருக்கலாம் என விசாரணையில் தெரியவந்துள்ளது மேலும் மர்ம கொள்ளையர்கள் குறித்து போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். நள்ளிரவில் பூட்டியிருந்த ஹார்டுவேர்ஸ் கடைக்குள் புகுந்து கொள்ளையடித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.