- கோரிக்கைகளை வலியுறுத்தி மனித சங்கிலி பேராட்டத்தில் ஈடுபட்டனர்
- அகவிலைப்படி, நிலுவைதொகையுடன் வழங்க கோரிக்கை
அரியலூர்,
பல்வேறு கோரி க்கைகளை வலியுறுத்தி அரியலூர் பேருந்து நிலையம் அருகில் ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் மனிதச் சங்கிலிப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.தன்பங்கேற்பு ஓய்வூதியத்தை ரத்துசெய்து, பழைய ஓய்வூதிய முறையே தொடர வேண்டும். மத்தியஅரசு ஊழியர்களுக்கு இணையான அகவிலை ப்படியை அறிவித்து நிலுவைத் தொகையையும் சேர்த்து வழங்க வேண்டும். முடக்கி வைக்கப்பட்டுள்ள சரண்விடுப்பை உடண டியாக வழங்க வேண்டும். பல்வேறு துறைகளில் தொகுப்பூதியத்திலும், சிறப்பு காலமுறை ஊதியத்திலும் பணி யாற்றும் பணியா ளர்கள், ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்து கால முறைஊதியம் வழங்க வேண்டும். காலிப்பணி யிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்.சாலைப் பணியா ளர்களின் 41 மாத பணிநீக்க காலத்தை முறைறப்படுத்த வேண்டும். பல்வேறு துறைகளில் தனியார் முகமை மூலம் பணியாளர்களை நியமனம் செய்யும் முறையை உடனடியாக தடைசெய் வேண்டும். ஆசிரியர்களை தேர்வு வாரியத்தின் மூலம் மட்டுமே பணியமர்த்த வேண்டும் என்பன உள்ளிட்ட 15 அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து இந்த மனிதச் சங்கிலிப் போராட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநில செயற்குழு உறுப்பினர் ஷேக்தாவூத் தலைமை வகித்தார். மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் சரவணசாமி, கருணாநிதி, மாநில உயர்மட்ட குழு உறுப்பினர் இளங்கோ உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.