உள்ளூர் செய்திகள்

ஆசிரியர்கள் சங்க கூட்டம்

Published On 2022-06-07 14:50 IST   |   Update On 2022-06-07 14:50:00 IST
  • ஆசிரியர்கள் சங்க கூட்டம் நடைபெற்றது
  • கோரிக்கைகளை வலியுறுத்தி கூட்டம் நடைபெற்றது.

அரியலூர்:

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் மாவட்ட அளவிலான தமிழ்நாடு பதவி உயர்வு பெற்ற முதுகலை பட்டதாரி ஆசிரியர் சங்கம் சார்பாக பல்வேறு கோரிக்கைகளை வைத்து கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தில் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் ரத்து செய்ய வேண்டும் நிறுத்தப்பட்ட ஈட்டி விடுப்பு வழங்க வேண்டும் ஆசிரியர்கள் பணி பாதுகாப்பு உறுதி செய்ய வேண்டும் வழங்கப்படாத டி ஏ உடனடியாக வழங்க வேண்டும்

உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து பேசினர். மற்றும் விடைத்தாள் மையத்தை அமைத்து தந்த அரசுக்கு நன்றி தெரிவித்தனர். கூட்டத்தில். மாநில தலைவர் நல்லாசிரியர் பொன் செல்வராஜ் சிறப்புரை ஆற்றினார்.

தலைவர் தா பெரியசாமி தலைமை தாங்கினார் முன்னதாக இங்கர்சால் மாவட்ட செயலாளர் வரவேற்புரை பேசினார். கா செல்வராஜ் முன்னிலை வகித்தார் மேலும் இந்த கூட்டத்தில் உடையார்பாளையம் செந்துறை ஆண்டிமடம் வரதராஜன்பேட்டை உள்ளிட்ட இடங்களில் இருந்து 300க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News