உள்ளூர் செய்திகள்

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவர் போக்சோவில் கைது

Published On 2022-09-24 15:16 IST   |   Update On 2022-09-24 15:16:00 IST
  • சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவர் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.
  • 10-ம் வகுப்பு படித்துவந்தார்

அரியலூர்

அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் அருகே உள்ள சூரக்குடி ஜே.ஜே.நகரை சேர்ந்தவர் ராஜேந்திரன்(வயது 60). கூலித்தொழிலாளியான இவர், அதே பகுதியைச் சேர்ந்த 10-ம் வகுப்பு பயிலும் 15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் சுமதி தலைமையிலான போலீசார் போக்சோவில் வழக்குப்பதிவு செய்தனர். தொடர்ந்து ராஜேந்திரனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News