உள்ளூர் செய்திகள்
தூய்மை பணியாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்
- அரியலூர் நகராட்சி தூய்மை பணியாளர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்
- பணிநீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து போராட்டம்
அரியலூர்,
அரியலூர் நகராட்சி ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் 25 பேரை மே 27ம் தேதி பணி நீக்கம் செய்யப்பட்டனர். இதனை கண்டித்து, நகராட்சி அலுவலகம் முன்பு நிரந்தரம் மற்றும் ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து நகராட்சி நிர்வாகம் மற்றும் ஒப்பந்ததாரர் தரப்பு மற்றும் ஏஐடியுசி தொழிலாளர் சங்க மாவட்டப் பொதுச் செயலர் டி.தண்டபாணி ஆகியோர் நடத்திய பேச்சுவார்த்தையை அடுத்து, பணி நீக்கம் செய்யப்பட்ட ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் 25 பேர் பணியில் சேர்ப்பதாக உறுதி அளிக்கப்பட்டது.