உள்ளூர் செய்திகள்

மாட்டு வண்டியில் மணல் கடத்தியவர் கைது

Published On 2022-09-20 12:19 IST   |   Update On 2022-09-20 12:19:00 IST
  • மாட்டு வண்டியில் மணல் கடத்தியவர் கைது செய்யப்பட்டார்
  • நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்‌.

அரியலூர்:

அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட புதுக்கோட்டை கிராம நிர்வாக அலுவலராக பணிபுரிந்து வருபவர் அமுதா. இவர் சம்பவத்தன்று திருமானூர் போலீசார் உடன் இணைந்து ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது, அவ்வழியே கொள்ளிட கரையிலிருந்து மணல் கடத்தி வந்த மாட்டுவண்டியை பறிமுதல் செய்தனர். மேலும் அதை ஓட்டி வந்த அதே கிராமத்தை சேர்ந்த அந்தோணிசாமி(வயது 62) என்பவரை கைது செய்து அரியலூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்‌.

Tags:    

Similar News