உள்ளூர் செய்திகள்

மணல் கடத்தியவர் கைது

Published On 2023-01-28 13:36 IST   |   Update On 2023-01-28 13:36:00 IST
  • மணல் கடத்தியவர் கைது செய்யப்பட்டார்.
  • மணல் கடத்தலுக்கு பயன்படுத்திய மாட்டு வண்டியும் பறிமுதல் செய்யப்பட்டது

அரியலூர்

அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் அருகே சாத்தம்பாடி கொள்ளிடம் ஆற்று படுகை பகுதியில் இருந்து ஒருவர் மணல் கடத்துவதாக கிராம நிர்வாக அலுவலர் தினேஷ் குமாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, அவர் விக்கிரமங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அதன்ேபரில் சப்-இன்ஸ்பெக்டர் லோகநாதன் தலைமையிலான போலீசார் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது ஸ்ரீபுரந்தான் நோக்கி ெசன்ற மாட்டு வண்டியை தடுத்து சோதனை செய்தனர். இதில், சட்டவிரோதமாக மணல் கடத்தியது தெரிய வந்தது. இதையடுத்து ஸ்ரீபுரந்தான் கல்லடி தெருவை சேர்ந்த கொளஞ்சிநாதன் (வயது 38) என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் மணல் கடத்தலுக்கு பயன்படுத்திய மாட்டு வண்டியும் பறிமுதல் செய்யப்பட்டது.

Tags:    

Similar News