உள்ளூர் செய்திகள்

அரசு பள்ளியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு

Published On 2023-02-08 10:26 GMT   |   Update On 2023-02-08 10:26 GMT
  • அரசு பள்ளியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நடந்தது.
  • இரண்டு சக்கர வாகனங்களில் அனுமதிக்கப்பட்ட இரண்டு நபர்களை விட அதிகமான எண்ணிக்கையில் செல்லக்கூடாது என தொடர்ந்து மாணவ, மாணவிகளிடையே கலந்துரையாடினார்.

அரியலூர்:

அரியலூர் அடுத்த சிறுவளூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் காவல் துறை சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் சின்னதுரை தலைமை வகித்தார். அரியலூர் போக்குவரத்து காவல் நிலையை ஆய்வாளர் கார்த்திகேயன் கலந்து கொண்டு பேசுகையில், மாணவர்கள் ஓட்டுநர் உரிமம் பெறாமல் வாகனத்தை இயக்க கூடாது. இரண்டு சக்கர வாகனங்களில் அனுமதிக்கப்பட்ட இரண்டு நபர்களை விட அதிகமான எண்ணிக்கையில் செல்லக்கூடாது என தொடர்ந்து மாணவ, மாணவிகளிடையே கலந்துரையாடினார். தலைமை காவலர் சந்திரமோகன், காவலர் திருநாவுக்கரசு ஆகியோர் மாணவர்களுக்கு சாலை பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தினர். இதற்கான ஏற்பாடுகளை ஆசிரியர்கள் தனலட்சுமி, ரமேஷ், பத்மாவதி, கோகிலா, தங்கபாண்டி, வீரபாண்டி, கபிலேஷா மற்றும் இளநிலை உதவியாளர் மணிகண்டன் ஆகியோர் செய்திருந்தனர்.

Tags:    

Similar News