பஸ் நிறுத்தங்களில் நிழற்குடைகள் அமைக்க கோரிக்கை
- திருமானூர் நெடுஞ்சாலைகளில் அமைந்துள்ள பஸ் நிறுத்தங்களில் நிழற்குடை அமைக்க கோரிக்கை
- சமூக ஆர்வலர் கூட்டமைப்பு கலந்தாய்வு கூட்டத்தல் வலியுறுத்தல்
திருமானூர்,
திருமானூரில் சமூக ஆர்வலர்கள் கூட்டமைப்பு கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.அரியலூர் மாவட்டம் திருமானூரில் சமூக ஆர்வலர்கள் கூட்டமைப்பு கலந்தாய்வு கூட்டம் சமூக ஆர்வலர் வரதராஜன் தலைமையில் நடந்தது.கூட்டத்தில் கரை சாலையை உடனே சரி செய்ய வேண்டும். திருமானூர் பகுதி கழிவு நீர்கள் நேரடியாக கொள்ளிட ஆற்றில் கலப்பதால் பொதுமக்களுக்கு நோய் ஏற்படும் அபாயம் உள்ளது கழிவு நீரை சுத்திகரிப்பு செய்ய வேண்டும். ஞாயிறு தோறும் பொதுமக்களுக்கு இடையூறாக ஞாயிற்றுக் கிழமைகளில் திருமானூர் சாலையில் செயல்படும் மீன் கடைகளை அகற்ற வேண்டும். திருமானூர் கொள்ளிடம் படித்துறைகள் சரி செய்ய வேண்டும். கொள்ளிடம் கரை பகுதிகள் அரிப்பு ஏற்படுவதை சரி செய்ய வேண்டும்திருமானூர் நெடுஞ்சாலைகள் அமைந்துள்ள பஸ் நிலையங்களில் நிழல் குடைகள் அமைக்க வேண்டும். போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.நிகழ்ச்சியின் நிறைவில் தங்க ஜெயபாலன் நன்றி உரை கூறினார். கூட்டத்தில் சமூக ஆர்வலர்களின் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பாளை திருநாவுக்கரசு மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.