- அரியலூரில் ரத்ததான முகாம் நடைபெற்றது
- முகாமை கலெக்டர் தொடங்கி வைத்தார்
அரியலூர்,
அரியலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு இரத்ததான முகாம் நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா ரத்ததான முகாமினை தொடங்கி வைத்தார். அப்போது, அவர் தலைமையில் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து சிறப்பாக செயல்பட்ட மருத்துவர்கள், அலுவலர்கள் மற்றும் குருதி கொடையாளர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களும் வழங்கப்பட்டது. குருதிக் கொடை குறித்து விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய ஸ்டிக்கர்கள் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு வழங்கப்பட்டது.
மருத்துவக் கல்லூரி மாணவர்களுக்கிடையே நடைபெற்ற இரத்ததான விழிப்புணர்வு ஓவியப்போட்டியில் வரையப்பட்ட மாணவர்களின் ஓவியங்களை கலெக்டர் பார்வையிட்டார். அரியலூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையின் முதல்வர் முத்துகிருஷ்ணன், துணை முதல்வர் சித்ரா, மருத்துவ கண்காணிப்பாளர் ரமேஷ், இருக்கை மருத்துவ அலுவலர் குழந்தைவேலு, நோயியல் துறை தலைவர் பிரேமலதா, குருதி வங்கி மருத்துவ அலுவலர் பிரியதர்ஷினி மற்றும் மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு அலகின் மாவட்ட திட்ட மேலாளர் சுமதி உள்ளிட்ட பலர் கலந்துக்கொண்டனர்.