சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்க பொதுமக்கள் கோரிக்கை
- அரியலூர் மாவட்டம் நம்மங்குணம் கிராமத்தில் சுத்திகரிப்பு நிலையம் மூலம் குடிநீர் வழங்க பொதுமக்கள் கோரிக்கை
- அரியலூர் மாவட்ட கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டது
அரியலூர்,
அரியலூர் மாவட்டம், நம்மங்குணம் கிராம மக்களுக்கு சுத்திகரிப்பு நிலையம் மூலம் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கலெக்டர் ஜா.ஆனிமேரி ஸ்வர்ணா விடம், விடுதலைச் சிறுத்தை கள் கட்சியின் மாவட்டச் செயலர் அங்கனூர் சிவா கோரிக்கை மனு அளித்தார்.
அவர் அளித்த மனுவில், நம்மங்குணம் கிராமத்தில் 1000-த்துக்கும் மேற்பட்ட குடுபங்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் உள்ள குடிநீர் ஆதாரங்களில் கால்சியம் அளவானது கூடுதலாக இருப்பதால் பெரும்பாலான மக்கள் சிறுநீரக நோயால் பாதிக்க ப்பட்டுள்ளனர். எனவே இப்பகுதி மக்களுக்கு காவிரி கூட்டுக் குடிநீர் திட்டம் அல்லது குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தின் மூலம் குடிநீர் வழங்க வேண்டும்.மேலும்,அங்கனூர் அய்யனார் தெருவில் சாலையை சீரமைக்க வேண்டும். சாலையக்குறிச்சி அருந்ததியர் மக்களுக்கு அடிப்படை வசதிகள் மற்றும் மயனாக்கொ ட்டகை அமைத்து தரவே ண்டும். அஸ்தி னாபுரம் ஆதிதிரா விடர் மக்களுக்கு இலவச வீட்டு மனைப் பட்டா வழங்க வேண்டும். அய ன்தத்தனூர் கிராமத்தி லுள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிக்கு செல்லும் சாலையை, அகலப்ப டுத்தி சிமென்ட் சாலையாக மாற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரி க்கைகள் அடங்கிய மனு க்களை அவர் அளித்தார்.