உள்ளூர் செய்திகள்

முற்போக்கு சிந்தனையாளர்கள் ஆர்ப்பாட்டம்

Published On 2023-02-02 07:59 GMT   |   Update On 2023-02-02 07:59 GMT
  • கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்றது
  • முற்போக்கு சிந்தனையாளர்கள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

அரியலூர்:

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரியலூர் மாவட்டம், மீன்சுருட்டி அடுத்த குண்டவெளி கிராமத்தில் முற்போக்கு சிந்தனையாளர்கள் இயக்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில், மிகவும் மோகமாக உள்ள கல்லாத்தூர் - மீன்சுருட்டி சாலையை உடனடியாக சீரமைத்து, பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது. மாநிலத் தலைவர் பாலசுப்பிரமணியன் தலைமை வகித்தார். கிளைத் தலைவர் பாலகிருஷ்ணன், கிளைச் செயலாளர் சிவசுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஏராளமான பொதுமக்கள், பள்ளி மாணவர்கள், முதியவர்கள் என பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனர்.

Tags:    

Similar News