உள்ளூர் செய்திகள்
- சிறப்பு வழிபாட்டில் பல்வேறு அபிஷேகங்கள்
- ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்
ஜெயங்கொண்டம்,
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் சன்னதி தெருவில் உள்ள பெரியநாயகி உடனுறை ஏழுமலைநாதர் கோவிலில் பிரதோஷ வழிபாடு நடைபெற்றது. இந்த சிறப்பு வழிபாட்டில் நந்திக்கு பால், தயிர், மோர், இளநீர் உள்ளிட்ட அபிஷேகங்கள் செய்யப்பட்டு வண்ண மலர்களால் அலங்கரித்து வதிவாதரனை காட்டப்பட்டது. பிரதோஷ வழிபாட்டுக்கு ஜெயங்கொண்டம் சுற்று பகுதியில் இருந்து ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சிவனை வழிபட்டு சென்றனர்.