ஜெயங்கொண்டம் பகுதியில் சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு
- ஜெயங்கொண்டம் பகுதியில் சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு நடைபெற்றது
- இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
ஜெயங்கொண்டம்,
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் கழுமலைநாதர் கோவிலில் பிரதோஷத்தை முன்னிட்டு நந்தியெம்பெருமானுக்கு திரவியபொடி, மாவுப்பொடி, மஞ்சள் சந்தனம், பால், தயிர், தேன் உள்ளிட்ட 16 வகையான திரவியங்களால் அபிஷேகங்கள் நடைபெற்றது. பின்பு மகா தீபாராதனை நடைபெற்றது. அதை தொடர்ந்து கோவிவில் பிரகார உலா நடைபெற்றது. மேலும் சென்னீஸ்வரர், சோழீஸ்வரர், கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர், உடையார்பாளையம் பயறனீஸ்வரர், பொன்பரப்பி சொர்ணபுரீஸ்வரர், செங்குந்தபுரம் ஏகாம்பரேஸ்வரர், தண்டலை திருமேனிஸ்வரர், இறவாங்குடி ஏகாம்பரேஸ்வரர், மேலகுடியிருப்பு ஆவீஸ்வரர், புதுச்சாவடி கல்யாணசுந்தரேஸ்வரர், மீன்சுருட்டி சொக்கலிங்கேஸ்வரர், தேவாமங்கலம் பால்வண்ணநாதர், திருத்துளார் அருளுடைய நாதர், வீரசோழபுரம் கைலாசநாதர், உட்கோட்டை அவதார ரட்சகர், உத்திரகுடி பசுபதீஸ்வரர், தூத்தூர் வராகமுத்தீஸ்வரர், ஸ்ரீபாலாம்பிகை வல்லம் காசிவிசுவநாதர் உள்ளிட்ட சிவன்கோவில்களில் பிரதோஷ வழிபாடு நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.