உள்ளூர் செய்திகள்

விபத்தை தடுக்க போலீசார் தீவிர வாகன சோதனை

Published On 2023-03-21 08:05 GMT   |   Update On 2023-03-21 08:05 GMT
  • தீவிர வாகன சோதனை நடைபெற்றது
  • அபராதம் விதித்து, போக்குவரத்து விதிமுறைகளை கடைபிடிக்க போலீசார் அறிவுரை

ஜெயங்கொண்டம்,

அரியலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பெரோஸ் கான் அப்துல்லா உத்தரவின் பேரில், ஜெயங்கொண்டம் போலீஸ் துணை சூப்பிரண்டு ராஜாசோமசுந்தரம் ஆலோசனையின் பேரில் ஜெயங்கொண்டம் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் சாகிராபானு தலைமையிலான போக்குவரத்து போலீசார் சிதம்பரம் சாலையில் வரும் வாகனங்களை நிறுத்தி தீவிர சோதனைக்கு உட்படுத்தினர். அப்போது மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டி வந்தவர்கள், ஹெல்மெட் அணியாமல் வந்தவர்கள், இலகு ரக வாகனத்தில் சீட் பெல்ட் அணியாமல் வந்தவர்கள், வாகனங்களின் இன்சூரன்ஸ் உள்ளிட்ட ஆவணங்கள் இல்லாதவர்களுக்கு அபராதம் விதித்து போக்குவரத்து விதிமுறைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தி அனுப்பி வைத்தனர்.


Tags:    

Similar News