உள்ளூர் செய்திகள்

அரியலூரில் மூன்றாம் கட்ட இலவச கொரோனா தடுப்பூசி முகாம்

Published On 2022-07-17 10:08 GMT   |   Update On 2022-07-17 10:08 GMT
  • அரியலூர் மாவட்டத்தில் இதுவரை 18 வயதிற்கு மேற்பட்டவர்களில் முதல் தவணை தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்கள் 105.6 சதவீதம், இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் 105.02 சதவீதம் ஆகும்
  • 18 முதல் 59 வயது வரையுள்ள அனைவரும் இலவசமாக வழங்கப்படும் முன்னெச்சரிக்கை தடுப்பூசியினை செலுத்திக் கொள்ளுமாறு கலெக்டர் வேண்டுகோள் விடுத்துள்ளார்

அரியலூர்:

அரியலூர் மாவட்ட கலெக்டர் ரமணசரஸ்வதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

அரியலூர் மாவட்டத்தில் இதுவரை 18 வயதிற்கு மேற்பட்டவர்களில் முதல் தவணை தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்கள் 105.6 சதவீதம், இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் 105.02 சதவீதம் ஆகும். 15-18 வயதிற்கு உட்பட்டோர் முதல் தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் 100.91 சதவீதம் இரண்டாம் தவணை தடுப்பூசிசெலுத்திக் கொண்டவர்கள் 88.51 சதவீதம் ஆகும்.

12-14 வயதிற்கு உட்பட்டோர் முதல் தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் 111.14 சதவீதம். இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் 80.14 சதவீதம் ஆகும்.

இதுவரை மொத்தமாக முதல் தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் 103.09 சதவீதம் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் 100.7 சதவீதம் ஆகும். கர்ப்பிணி பெண்கள் முதல் தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் 102 சதவீதம் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் 99 சதவீதம் ஆகும்.

பாலூட்டும் தாய்மார்கள் முதல் தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் 102 சதவீதம். இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் 98 சதவீதம் முன்களப்பணியாளர்கள் முதல் தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் 109 சதவீதம் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் 60 சதவீதம் முன்னெச்சரிக்கை தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர் 45சதவீதம் சுகாதாரப் பணியாளர்கள் முதல் தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் 111 சதவீதம்.

இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் 65 சதவீதம் நமது மாவட்டத்தில் மாற்றுத் திறனாளிகள் மற்றும் எச்ஐவியால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் 100 சதவீதம் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

15.01.2022 தேதிக்குள் இரண்டு தவணை கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் முன்னெச்சரிக்கை தடுப்பூசி செலுத்திக் கொள்ள தகுதியானவர்கள்.

எனவே, 18 முதல் 59 வயது வரையுள்ள அனைவரும் இலவசமாக வழங்கப்படும் முன்னெச்சரிக்கை தடுப்பூசியினை செலுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News