உள்ளூர் செய்திகள்

தனிநபர் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள பொது இடத்தை மீட்க கோரி மனு

Published On 2023-01-24 06:17 GMT   |   Update On 2023-01-24 06:17 GMT
  • கிராம மக்கள் கோரிக்கை மனு
  • 3 மாதங்களாக ஆக்கிரமிப்பு என பொதுமக்கள் குற்றச்சாட்டு

அரியலூர்,

அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் அடுத்த வடுகர்பாளையம் கிராமத்தில் தனிநபர் ஆக்கிரமித்துள்ள பொது இடத்தை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கலெக்டர் பெ.ரமணசரஸ்வதியிடம் கிராம மக்கள் கோரிக்கை மனு அளித்தனர். அந்த மனுவில், வடுகர்பாளையத்தில் அரசுக்கு சொந்தமான இடத்தை 8 நபர்கள் சில ஆண்டுகளாக ஆக்கிரமித்திருந்த நிலையில், பொதுமக்களின் கோரிக்கையடுத்து 7 நபர்கள் ஆக்கிரமிப்பை கைவிட்டனர். அதில் ஒருவர் ஒரு மாதம் அவகாசம் கேட்டிருந்தார். ஆனால் 3 மாதங்களாகியும் அவர் ஆக்கிரமிப்பை அகற்றவில்லை. இது குறித்து ஊராட்சித் தலைவர், வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் சம்மந்தப்பட்ட அலுவலர்களிடம் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை. எனவே மாவட்ட கலெக்டர் உடனடியாக ஆக்கிரமிப்பை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News