உள்ளூர் செய்திகள்

தண்ணீர் பந்தல் திறப்பு

Published On 2023-03-21 08:14 GMT   |   Update On 2023-03-21 08:14 GMT
  • உதயநத்தம் கிராமத்தில் தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டது
  • ஆம் ஆத்மி கட்சி சார்பில் நடைபெற்றது

உடையார்பாளையம்,

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அடுத்த உதயநத்தம் கிராமத்தில் கோடைகால வெயிலின் தாக்கத்தை தணிக்க நீர்மோர் தண்ணீர் பந்தல் திறப்பு விழா ஆம் ஆத்மி கட்சியின் தா பழூர் ஒன்றிய செயலாளர் பிஎம் ஜீவா தலைமையில் நடைபெற்றது.இவ்விழாவில் ஆம் ஆத்மி கட்சியின் மாநில மகளிர் அணி செயலாளர் ஸ்டெல்லா மேரி, மண்டல பொறுப்பாளர் டாக்டர் தேவகுமார், மாநில தலைவர் வசிகரன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினர். இவ்விழாவில் ஆம் ஆத்மி கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News