உள்ளூர் செய்திகள்

அமுதம் அங்காடியில் கோட்டாட்சியர் ஆய்வு

Published On 2022-11-24 15:12 IST   |   Update On 2022-11-24 15:12:00 IST
  • அமுதம் அங்காடியில் கோட்டாட்சியர் ஆய்வு மேற்கொண்டார்
  • பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.

அரியலூர்:

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் சிதம்பரம் சாலையில் அமுதம் அங்காடி சில வருடங்களாக ஒரே இடத்தில் இயங்கி வருகிறது. இதில் 1160 குடும்ப அட்டைக்கு பொருள்கள் வழங்கி வருகிறார்கள். இந்நிலையில் மாதந்தோறும் அங்காடியில் பொருள்கள் தரமாக உள்ளதா, அனைத்து தர மக்களுக்கும் போய் சேருகிறதா பொதுமக்கள் வாங்குவதற்கு வருகிறார்களா என உடையார்பாளையம் கோட்டாட்சியர் பரிமளம் திடீரென ஆய்வு செய்தார். அப்போது முருகன் வாங்க வந்த பொதுமக்களிடம் அனைத்து பொருட்களும் உங்களுக்கு மாதந்தோறும் கிடைக்கிறதா என விசாரித்தார். மேலும் அங்காடியில் அவர்கள் நடந்தால் உடனடியாக எங்களுக்கு தெரிவிக்க வேண்டும் என கூறி சென்றார்.

Tags:    

Similar News