அரியலூர் மாவட்டத்தில் எண்ணும், எழுத்தும் பயிற்சி: கலெக்டர் நேரில் ஆய்வு
- அரியலூர் மாவட்டத்தில் எண்ணும், எழுத்தும் பயிற்சியினை கலெக்டர் நேரில் ஆய்வு செய்தார்
- பயிற்சியில் கலந்துகொண்ட ஆசிரியர்களுக்கு பல்வேறு அறிவுரைகள் கலெக்டர் வழங்கினார்.
அரியலூர்,
மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம், பெரம்பலூர் ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் ஆகியவை இணைந்து நடத்தும் 4 முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு 2023-24-ம் ஆண்டிற்கான எண்ணும்-எழுத்தும் திட்டத்தினை தமிழக அரசின் பள்ளி கல்வித்துறை அறிமுகம் செய்து முதலாம் ஆண்டிற்கான 3 நாள் பயிற்சியை தொடங்கியது. அதன்படி அரியலூர் மாவட்டம், திருமானூர் அரசினர் மேல்நிலைப்பள்ளி. வட்டார அளவிலான பயிற்சியானது 6 ஒன்றியங்களில் 698 ஆசிரியர்களுக்கு நாளை வரை நடத்தப்படுகிறது.இதில், திருமானூர் வட்டார வள மையத்தில் நடைபெற்ற பயிற்சியினை கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
மாணவர்களுக்கு மகிழ்ச்சியான கற்றல் தொடர்ந்திட, அனைத்து நிலை மாணவர்களும் செயல்பாடுகளில் பங்குபெற, படைப்பாற்றல் சிறந்து விளங்கிட, பேச்சுத்திறன் வளர்ந்திட, சக மாணவர்களுடன் இணைந்து செயல்படுதல் ஆகிய செயல்பாடுகள் பயிற்சியின் கருப்பொருளாக ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. இந்த ஆய்வின் போது பயிற்சியில் கலந்துகொண்ட ஆசிரியர்களுக்கு பல்வேறு அறிவுரைகள் கலெக்டர் வழங்கினார். நிகழ்ச்சியில் முதன்மைக் கல்வி அலுவலர் விஜயலட்சுமி, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர்(பொ) முருகண்ணன், மற்றும் கல்வித்துறை அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.