உள்ளூர் செய்திகள்

ஜெயங்கொண்டம் நகராட்சி சாதாரண கூட்டம்

Published On 2022-11-19 15:15 IST   |   Update On 2022-11-19 15:15:00 IST
  • ஜெயங்கொண்டம் நகராட்சி சாதாரண கூட்டம் நடைபெற்றது
  • அடிப்படை வசதிகள் உடனடியாக செய்து தர தீர்மானம்

அரியலூர்:

ஜெயங்கொண்டம் நகராட்சி கூட்டரங்கில் 21 வார்டு கவுன்சிலர்களுக்கான சாதாரண கூட்டம் நடைபெற்றது. நகர மன்ற தலைவர் சுமதி சிவகுமார் தலைமை தாங்கினார். நகர மன்ற துணைத் தலைவர் கருணாநிதி முன்னிலை வகித்தார். ஜெயங்கொண்டம் நகராட்சி ஆணையர் வரவேற்று பேசினார். கூட்டத்தில் சாவித்திரி பல்வேறு தீர்மானங்களை வாசித்து பேசினார். மேலும் அனைத்து வாடுகளிலும் உள்ள கவுன்சிலர்கள் தங்கள் வார்டுகளில் உள்ள அடிப்படை தேவைகளை முக்கிய பணிகளை தெரிவித்தனர். இதற்கு பதிலளித்த ஆணையர் தலைவர் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். மேலும் நகராட்சியில் பணிபுரியும் துப்புரவு தொழிலாளர்கள் 134 நபருக்கு கையுறை உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்பட்டது.

Tags:    

Similar News