உள்ளூர் செய்திகள்

மது விற்றவர் கைது

Published On 2023-07-06 12:33 IST   |   Update On 2023-07-06 12:33:00 IST
  • மது விற்றவர் கைது செய்யப்பட்டார்.
  • விற்பனைக்காக வைத்திருந்த 19 மதுபாட்டில்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

அரியலூர் :

அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் சப்-இன்ஸ்பெக்டர் திருவேங்கடம் தலைமையிலான போலீசார் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது சூரியமணல் வடக்கு தெருவை சேர்ந்த சின்னத்திரை (வயது 54) என்பவர் டாஸ்மாக் கடை அருகே மது பாட்டில்களை விற்பனை செய்தது தெரிய வந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். மேலும் விற்பனைக்காக வைத்திருந்த 19 மதுபாட்டில்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

Tags:    

Similar News