உள்ளூர் செய்திகள்

மது விற்றவர் கைது

Published On 2023-06-15 12:12 IST   |   Update On 2023-06-15 12:12:00 IST
  • மது விற்றவர் கைது செய்யப்பட்டார்.
  • மேலும் போலீசார் விற்பனைக்காக வைத்திருந்த 13 மதுபாட்டில்களையும் பறிமுதல் செய்தனர்.

அரியலூர் :

அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி சப்-இன்ஸ்பெக்டர் மதியழகன் தலைமையிலான போலீசார் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது வீரசோழபுரம் அரசு மதுபான கடை அருகே சட்டவிரோதமாக மது விற்றவரை மடக்கி பிடித்தனர். விசாரணையில் அவர் ஜெயங்கொண்டம் அருகே உள்ள உட்கோட்டை வடக்கு தெருவை சேர்ந்த அறிவழகன் (வயது 59) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். மேலும் விற்பனைக்காக வைத்திருந்த 13 மதுபாட்டில்களையும் பறிமுதல் செய்தனர்.

Tags:    

Similar News