உள்ளூர் செய்திகள்

மது விற்றவர் கைது

Published On 2022-09-19 11:58 IST   |   Update On 2022-09-19 11:58:00 IST
  • மது விற்றவர் கைது செய்யப்பட்டார்.
  • வீட்டில் சோதனை செய்தனர்

அரியலூர்:

அரியலூர் மாவட்டம், விக்கிரமங்கலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் லோகநாதன் மற்றும் போலீசார் விக்கிரமங்கலம் மெயின்ரோடு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது மது விற்பதாக கிடைத்த ரகசிய தகவலின்பேரில் விக்கிரமங்கலம் மெயின்ரோட்டை சேர்ந்த மாரிமுத்து(வயது 40) என்பவரது வீட்டில் சோதனை செய்தனர். இதில் அவரது வீட்டின் பின்புறம் இருந்து விற்பனை செய்வதற்காக மறைத்து வைக்கப்பட்டிருந்த மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து மாரிமுத்துவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News