உள்ளூர் செய்திகள்
- 3-வது நாளாக தொடரும் போராட்டம்
- பணி பாதுகாப்பு கோரி போராட்டம்
அரியலூர்,
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரியலூர் அரசு கலைக் கல்லூரி முன்பு கௌரவ விரிவுரையாளர்கள் 3 ஆவது நாளாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில், கடந்த 2006-இல் அப்போதைய முதல்வர் கருணாநிதி அறிவித்த வெயிட்டேஜ் மதிப்பெண் முறையில் உதவிப் பேராசிரியர்களை நியமிக்க வேண்டும். பல்கலைக் கழக மானியக்குழு பரிந்துரைபடி நிர்ணயித்த ஊதியத்தினை உடனடியாக வழங்க வேண்டும். உதவிப் பேராசிரியருக்கான மாநிலத் தகுதித் தேர்வை தொடர்ந்து நடத்த வேண்டும். விரிவுரையாளர்களின் பணிப் பாதுகாப்பினை உறுதி செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில், அக்கல்லூரியில் பணிப்புரியும் கௌரவ விரிவுரையாளர்கள் அனைவரும் கலந்து கொண்டு மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனர்.