உள்ளூர் செய்திகள்

கூடுதல் அரசு தலைமை செயலாளர் ஆய்வு

Published On 2023-03-26 11:46 IST   |   Update On 2023-03-26 11:46:00 IST
  • வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து எரிசக்தி துறை கூடுதல் தலைமை செயலாளர் ஆய்வு நடத்தினார்
  • மாவட்ட கலெக்டர் ரமண சரஸ்வதி உடனிருந்தார்

உடையார்பாளையம்,

அரியலூர் மாவட்டத்தில் ஜெயங்கொண்டம் உள் ளிட்ட பகுதிகளில் மேற் கொள்ளப்பட்டு வரும் பல் வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், எரிசக்தித்துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளருமான ரமேஷ் சந்த் மீனா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆய்வின் போது, வருவாய் கோட்டாட்சியர் பரிமளம், தோட் டக்கலைத் துணை இயக்குநர் ஆனந்த், பொது சுகாதார துணை இயக்குநர் கீதாராணி மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.ஆய்வில், ஜெயங்கொண் டம் ஒன்றியம், மேலக்குடியிருப்பு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தின்கீழ் பள்ளிக் குழந்தைகளுக்கு வழங்கப்பட்டு வரும் உணவு, மாணவர்களின் எண்ணிக்கை, உணவின் தரம் போன்றவை குறித்து கேட்டறிந்ததுடன் மாண–வர்களுக்கு வழங்கப்படும் உணவின் தரத்தினை சாப் பிட்டு ஆய்வு செய்தார்.பின்னர், கீழக்குடியிருப்பு, கொம்மேடு கிராமத்தில் உள்ள பயோ குப்பைக் கிடங்கினை ஆய்வு செய்து குப்பைகள் தரம் பிரிக் கப்படும் முறைகள் குறித் தும், குப்பைகள் மறு–சுழற்சி செய்யப்படுவது குறித்தும் கேட்டறிந்தார். மேலும், செங்குந்தபுரத்தில் செயல்ப–டுத்தப்படும் திடக்க–ழிவு மேலாண்மைத் திட்டம் குறித்தும் நேரில் பார்வை–யிட்டு ஆய்வு செய்தார்.தொடர்ந்து கழுவந் தோண்டி கிராமத்தில் ரூ.40.91 லட்சம் மதிப்பீட்டில் கழுவந்தோண்டி மயான சாலையில் கட்டப்பட்டு வரும் பாலம் அமைத்தல் பணியையும், ரூ.2.78 லட்சம் மதிப்பீட்டில் நீதிமன்ற சாலையில் புதியதாக அமைக்கப்பட்டுள்ள கழிவு நீர் வடிகால் வாய்க்கால் பணியையும், ரூ.4.65 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் கதிரடிக்கும் களம் கட்டுமான பணியையும் பார்வையிட்டு நடைபெறும் பணிகளை தரமாகவும், விரைவாகவும் செய்து முடிக்க சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத் தினார்.பின்னர், பெரியவளையம் கிராமத்தில், தோட்டக்க–லைத்துறையின் சார்பில் மானிய விலையில் ரூ.75,000 மதிப்பீட்டில் அமைக்கப் பட்டுள்ள பண்ணை குட்டை பார்வையிட்டார். தொடர்ந்து ஆமணக்கந் தோண்டி அங்கன்வாடி மையத்தினை பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து உட்கோட்டை (வடக்கு) கிராமத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தினை பார்வையிட்டு ஆய்வு செய்ததுடன் நோயாளிகளுக்கு தாமதமின்றி தரமான சிகிச்சைகள் தொடர்ந்து கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் எனவும் சம்மந்தப்பட்ட மருத்துவர்களுக்கு அறிவுறுத்தினார்.

Tags:    

Similar News