உள்ளூர் செய்திகள்
இடைநிலை ஆசிரியர்கள் தொடர் போராட்டம்
- அரியலூரில் இடைநிலை ஆசிரியர்கள் 14-வது நாளாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்
- 28-ந்தேதி சென்னையில் போராட்டம் நடத்தபோவதாக அறிவிப்பு
அரியலூர்,
அரியலூர் ஒன்றியத்தில், அர்ஜனாபுரம், அருங்கால், வண்ணாரப்பேட்டை, கரு.பொய்யர், கரு.சேனாபதி, இடையத்தான்குடி, கல்லக்குடி, ஒ. கூத்தூர், மண்னுழி, முனியங்குறிச்சி, பள்ள கிருஷ்ணாபுரம், ஆதனூர், ஆண்டிப்பட்டாக்காடு, பூ. ஓட்டக் கோவில் உள்ளிட்ட பகுதிகளிலுள்ள அரசுப் பள்ளிகளில் பணியாற்றி வரும் இடைநிலை ஆசிரியர்கள் கோரிக்கை அட்டை அணிந்து 14-வது நாளாக நேற்றும் பணியாற்றினர். இதே போல் திருமானூர், செந்துறை, ஆண்டிமடம், தா.பழூர் ஆகிய ஒன்றியங்களில் பணிபுரியும் 350 ஆசிரியர்களும் கோரிக்கை அட்டை அணிந்து பணியாற்றினர்.
வரும் 27-ந்தேதிக்குள் கோரிக்கைகளுக்குத் தீர்வு காணாவிட்டால், வரும் 28-ந்தேதி முதல் பருவத்தேர்வு விடுமுறை நாள்களில், சென்னை டிபிஐ வளாகத்தில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதக இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் இயக்கத்தினர் தெரிவித்துள்ளனர்.